மறைக்கப்பட்ட வெடிபொருட்கள் பொதியொன்று கடற்படையால் மீட்பு

2020 ஜனவரி 29 ஆம் திகதி திருகோணமலை எரக்கண்டி கடற்கரையில் இலங்கை கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு பாறைக்கு அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் பொதியொன்று கண்டுபிடித்தனர்.

கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உறுதிபூண்டுள்ள இலங்கை கடற்படை 2020 ஜனவரி 29 ஆம் திகதி திருகோணமலை எராகண்டி கடற்கரையில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த வெடிபொருட்கள் மீட்டுள்ளனர். மறைக்கப்பட்ட வெடிபொருட்களில் 20 வாட்டர் ஜேல் குச்சிகள், 04 பாதுகாப்பு வெடி நூல்கள் 02 மின்சார அல்லாத வெடித்தூண்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன்படி, இவ்வாரு கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்களை மேலதிக விசாரணைகளுக்காக கடற்படை பறிமுதல் செய்தது.