நான்கு கிலோ கிராமுக்கு மேற்பட்ட தங்கத்துடன் இந்தியர்கள் நால்வர் கைது

இலங்கை கடற்படை 2020 ஜனவரி 29 ஆம் திகதி குதிரமலை கடல் பகுதியில் நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது கடல் வழியாக கடத்தப்பட்ட தங்கத்துடன் 04 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

குதிரமலை கடல் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினால் சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகொன்று கண்கானிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அங்கு படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 41 தங்க பிஸ்கட்கள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டதுடன் 04 கிலோ மற்றும் 200 கிராம் எடையுள்ள இந்த தங்க பிஸ்கட்டுகளுடன், 04 இந்தியர்களும் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30, 35, 36 மற்றும் 50 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், தங்கத்தை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட படகும் கடற்படையிபால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன்படி, கடற்படையால் கைது செய்யப்ட்ட 04 கிலோ மற்றும் 200 கிராம் தங்கம் மற்றும் நான்கு சந்தேக நபர்கள் சின்னப்பாடு சுங்கத்திடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் கடற்படை, 2019 ஆம் ஆண்டில் சுமார் 11 கிலோ மற்றும் 695 கிராம் தங்கத்தை கைப்பற்றியுள்ளது. மேலும் சில குற்றவாளிகளால் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் முயற்சியில் கடற்படை தொடர்ந்து விழிப்புடன் இருக்கும்.