கேரள கஞ்சா பொதி யொன்று கடற்படை கைப்பற்றியது.

2020 ஜனவரி 31, ஆம் திகதி பலுகஹதுரை பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பொது, சுமார் 04 கிலோ மற்றும் 200 கிராம் கேரள கஞ்சாவை கடற்படை கைப்பற்றியது.

2020 ஜனவரி 31 ஆம் திகதி பலுகஹகந்துரை பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 04 கிலோ மற்றும் 200 கிராம் கேரளா கஞ்சா அடங்கிய சந்தேகத்திற்கிடமான பொதி யொன்று கடற்படை கண்டுபிடித்தது. பின்னர் குறித்த கஞ்சா பொதி கடற்படையால் கைப்பற்றப்பட்டது, போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக கடற்படை தனது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதால் குறித்த கேரள கஞ்சா பொதி கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக நம்பப்படுகிறது.

கடற்படையால் கைது செய்யப்பட்ட சுமார் 04 கிலோ மற்றும் 200 கிராம் கேரள கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக வனாதவில்லுவ காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.