இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இது வரை தீவு முலுவதும் மேற்கொண்டுள்ள வெற்றிகரமான கடற்படை நடவடிக்கைகள் மூலம் சுமார் அரை டன் கேரள கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது

இந்த ஆண்டு ஜனவரி 01 முதல் இன்று வரை (2020 பிப்ரவரி 1) தீவு முலுவதும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மூலம் சுமார் அரை டன்னுக்கு மேல் கேரள கஞ்சாவை கடற்படை கைப்பற்றியுள்ளது.

இலங்கை கடற்படை 2020 ஜனவரி 1 முதல் இன்று வரை (பிப்ரவரி 1, 2020) மொத்தம் 535 கிலோகிராம் கேரள கஞ்சாவை நாடு முலுவதும் மேற்கொண்டுள்ள வெற்றிகரமாக நடவடிக்கைகளின் பொது கைது செய்துள்ளது அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை மொத்தம் 324 கிலோ மற்றும் 822 கிராமும், வடமேற்கு கடற்படை கட்டளை கிட்டத்தட்ட 180 கிலோ மற்றும் 660 கிராமும், தெற்கு கடற்படை கட்டளை கிட்டத்தட்ட 14 கிலோ மற்றும் 903 கிராமும், மற்ற கடற்படை கட்டளைகளால் 13 கிலோ மற்றும் 757 கிராம் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடலையும் நிலத்தையும் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் கேரள கஞ்சாவை இலங்கைக்கு கொண்டு வர முயற்சிப்பவர்களை கைது செய்ய கடற்படைக்கு முடிந்தது. 2019 ஆம் ஆண்டில் 3.4 டன்களுக்கும் அதிகமான கேரள கஞ்சாவையும் கடற்படை கண்டுபிடித்துள்ளது, மேலும் சட்டவிரோத கடத்தலைத் தடுக்க கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.