வடக்கு கடல்களில் கடற்படை நடவடிக்கையின் போது சுமார் 10 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது

2020 பெப்ரவரி 04 ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் மாதகலுக்கு வெளியே கடல்களில் மேற்கொண்ட கடற்படை நடவடிக்கையின் போது சுமார் 10 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினால் கண்டுபிடிக்க முடிந்தது.

தீவின் நீரில் கடற்படையின் தொடர்ச்சியான தேடல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடற்படை மாதககல் கடல் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது கடலில் மிதந்துக்கொண்டிருந்த கிட்டத்தட்ட 10 கிலோகிராம் கேரள கஞ்சாவை கண்டுபிடித்தது.

கடல் வழியாக போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க தொடர்ந்து கடற்படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சத்தில் கடத்தல்காரர்கள் இந்த கேரள கஞ்சாவை கடலில் கைவிட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.