இன்று (பெப்ரவரி 5) யாழ்ப்பாணத்தின் குசுமந்துரையில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இலங்கை கடற்படை கிட்டத்தட்ட 4 கிலோ கேரள கஞ்சாவை கைப்பற்றியது.

இன்று (பெப்ரவரி 5) யாழ்ப்பாணத்தின் குசுமந்துரையில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இலங்கை கடற்படை கிட்டத்தட்ட 4 கிலோ கேரள கஞ்சாவை கைப்பற்றியது.

போதைப்பொருள் கடத்தலை எதிர்த்து தீவு முழுவதும் வழக்கமான போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள கடற்படை, இன்று குசுமந்துரை பகுதியில் ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பார்சலைக் கண்டது. மேலதிக தேடலின் போது, பார்சலில் இருந்த சுமார் 04 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது, பின் அவை கடற்படை காவலில் எடுக்கப்பட்டது.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொலிஸ் யாழ்ப்பாணம் அதிரடுப்படையினரிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.