பாகிஸ்தான் விமானப்படையின் விமானப்படைத் தலைவர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் விமானப்படை விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் முஜித் அன்வர் கான், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை இன்று (பெப்ரவரி 07) கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

வருகை தந்த பாகிஸ்தான் விமானப்படைத் தலைவரை கடற்படை மரபுகளின்படி மரியாதைக்குரிய அணிவகுப்புடன் கடற்படைத் தளபதியும் மூத்த இயக்குநர் ஜெனரல்களும் வரவேற்றனர்.

நல்லுறவு கலந்துரையாடலின் போது, இருதரப்பு ஆர்வம் மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் அவர்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். நீண்டகால ஒத்துழைப்பைக் குறிக்கும் நினைவுச் சின்னங்களின் பரிமாறப்பட்டன.