இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகளுக்காக இலங்கை கடற்படை மற்றொரு பாடத்திட்டத்தை திருகோணமலையில் நடத்துகிறது

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் நிறுவனத்தின் பங்காளிகள் சார்பாக நடத்தப்படுகின்ற கப்பல்கள் மற்றும் கப்பல்களுக்கான அணுகல், நடைமுறைகள் மற்றும் ஆய்வுக்கான நடைமுறைகள் பயிற்சியின் மற்றொரு பாடநெறி 2020 பிப்ரவரி 10 ஆம் திகதி திருகோணமலை சிறப்பு படகுப் படை தலைமையகப் பயிற்சி பாடசாலையில் தொடங்கியது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலில் கிழ் மேற்கொள்கின்ற இந்த பயிற்சி பாடநெரியின் தொடக்க விழாவில் பிரதம அதிதியாக சிறப்பு படகுப் படையின் பயிற்சி அதிகாரி கொமான்டர் நிஷ்சன்க விக்ரமசிங்க கலந்து கொண்டதுடன் இந்த பாடத்திட்டத்தில் பங்களாதேஷ் கடலோர காவல்படையின் ஒரு உறுப்பினர், கடற்படை கொடி கட்டளையின் 08 கடற்படையினர் மற்றும் சிறப்பு படகுப் படையின் 7 கடற்படை வீரர்கள் பங்கேற்கின்றனர்.

திருகோணமலை சிறப்பு படகுப் படைத் தலைமையகத்தில் இந்த பாடநெறி 12 நாட்களாக இடம்பெறும். மேலும், இந்த பாடநெறி முக்கியமாக போதைப்பொருள் கண்டறிதல், போதைப்பொருள் கடத்தல், தயாரிப்பு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.