தலைமன்னார் புகையிரத நிலையத்தை சுத்தம் செய்ய கடற்படை உதவி

மனித நடவடிக்கைகள் மற்றும் இயற்கை காரணங்களினால் தூய்மையற்ற தலைமன்னர் புகையிரத நிலையம் 2020 பிப்ரவரி 11 ஆம் திகதி கடற்படையால் சுத்தம் செய்யப்பட்டது.

வட மத்திய கடற்படை கட்டளை தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், 2020 பிப்ரவரி 11 அன்று தலைமன்னார் புகையிரத நிலையத்தை சுத்தம் செய்யும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. அங்கு மனித நடவடிக்கைகள் மற்றும் இயற்கை காரணங்களால் சேதமடைந்த புகையிரத நிலையத்தை கடற்படையால் சுத்தம் செய்யப்பட்டது.

இந் நிகழ்வுக்காக இலங்கை கடற்படை கப்பல் தம்மண்ணா நிறுவனத்தில் இணைக்கப்பட்ட கடற்படையினர்கள் கலந்து கொண்டனர். மேலும் கடற்படையினரின் முயற்சியை ரயில்வே ஊழியர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் மிகவும் பாராட்டினர்.