இலங்கை கடற்படை கப்பல் காஷ்யப நிருவனத்தில் நிருவப்பட்ட கடற்படை கட்டளை அதிகாரி (திருகோணமலை தெற்கு) அதிகாரப்பூர்வ இல்லம் திறக்கப்பட்டது

புதிதாக கட்டப்பட்ட கடற்படை கட்டளை அதிகாரி (திருகோணமலை தெற்கு) அதிகாரப்பூர்வ இல்லம் இன்று (2020 பிப்ரவரி 14) கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க திறந்து வைத்தார்.

இலங்கை கடற்படை கப்பல் காஷ்யப நிருவனத்தில் நிருவப்பட்ட இந்த அதிகாரப்பூர்வ இல்லம் இன்று திறந்து வைக்கப்பட்ட பின் இந்த சந்தர்ப்பத்தை குறித்து ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க அதிகாரப்பூர்வ இல்ல வளாகத்தில் ஒரு கும்புக் கன்றை நட்டார். இந் நிகழ்வுக்காக கடற்படை கட்டளை அதிகாரி (திருகோணமலை வடக்கு) கமடோர் நிஷாந்த பொன்னம்பெரும, கடற்படை கட்டளை அதிகாரி (திருகோணமலை தெற்கு) கமடோர் பிரசாத் காரியப்பெரும, துறைத் தலைவர்கள் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் கட்டளை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க நினைவு புத்தகத்தில் ஒரு குறிப்பை பதிவு செய்தார். மேலும், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அதிகாரிகளுடன் ஒரு புகைப்படத்திற்கும் கலந்துகொண்டுள்ளார்.