வெலிசர கடற்படை வளாகத்தில் புதிய கடற்படை கட்டளை அதிகாரி கடமையேற்பு

கேப்டன் (ஆயுதங்கள்) பூஜித சுகதாதாச வெலிசர கடற்படை வளாகத்தின் புதிய கடற்படை கட்டளை அதிகாரியாக 2020 பிப்ரவரி 14 அன்று கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

அதன்படி, வெலிசர கடற்படை வளாகத்தின் கடற்படை கட்டளை அதிகாரியாக இருந்த கமடோர் பிரதீப் ரத்நாயக்க, புதிய பதவியை புதிதாக நியமிக்கப்பட்ட கேப்டன் (ஆயுதங்கள்) பூஜித சுகததாசவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார். இங்கு சிறப்பு அணிவகுப்பு மரியாதை மூலம் கொமடோர் பிரதீப் ரத்நாயக்கவுக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுக்காக வெலிசர கடற்படை வளாகத்தின் அனைத்து கட்டளை அதிகாரிகள், மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கலந்து கொண்டனர்.