கடற்படை தளபதி கடற்படை சுழியோடி பாடசாலைக்கு விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் த சில்வா இன்று (2020 பிப்ரவரி 15) கடற்படை சுழியோடி பாடசாலைக்கு ஒரு ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அதன்படி, 2020 பிப்ரவரி 10 ஆம் திகதி முதல் பிரிட்டிஷ் கடற்படையின் சுழியோடி உறுப்பினர்கள் மற்றும் இலங்கை கடற்படை சுழியோடி உறுப்பினர்கள் இணைந்து ஆய்வு செய்து வரும் கூட்டு சுழியோடி பாடநெறியின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா இவ்வாரு திருகோணமலை கடற்படை கப்பல்துறை கடற்படை சுழியோடி பாடசாலைக்கு சென்றார்.

அங்கு கடற்படைத் தளபதி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் உறுப்பினர்களை சந்தித்து உறையாடினார். மேலும் அவர்களுடக் ஒரு குழு புகைப்படத்துக்கும் கழந்துக்கொண்டார்.