நிர்வாக அதிகாரி நீண்ட கால பாடநெறிகளின் சான்றிதழ் வழங்கல் விழா கடற்படைத் தளபதியின் தலைமையில் இடம்பெற்றது

அட்மிரல் வசந்த கரண்னாகொட ஆடிட்டோரியத்தில் இன்று (2020 பிப்ரவரி 15,) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் தலைமையில் நிர்வாக அதிகாரி நீண்ட கால பாடநெறியின் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

நிர்வாக அதிகாரி நீண்ட கால பாடநெறி முதல் முறையாக 2019 ஜூலை 01 ஆம் திகதி கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் தொடங்கியது மற்றும் அதில் நீர்மூழ்கி எதிர்ப்பு போர், தகவல் தொடர்பு, கன்னேரி மற்றும் ஊடுருவல் ஆகியவற்றின் சிறப்பு பாடநெறிகள் அடங்கும், ஒவ்வொரு பாடத்திற்கும் 06 அதிகாரிகள் சேர்க்கப்பட்டனர்.

அதன் படி இந்த பாடநெறியை வெற்றிகரமாக முடித்த அதிகாரிகள் மற்றும் பாடநெறியின் போது சிறந்து விளங்கியவர்கள் பிரதம அதிதியாக கழந்துக்கொண்ட கடற்படைத் தளபதியிடமிருந்து சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளைப் பெற்றனர். இந்நிகழ்வில் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி, ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க, பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் நந்தன ஜெயரத்ன, கடற்படை கொடி கட்டளையின் கொடி அதிகாரி, ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா, பணிப்பாளர் நாயகம் பயிற்சி, ரியர் அட்மிரல் ரோஹித பெரேரா மற்றும் ஏராளமான அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கலந்து கொண்டனர்.

சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கல் முடிந்ததும், கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி கொமடோர் பிரசன்ன மகாவித்தான கடற்படைத் தளபதியிடம் நினைவு பரிசொன்று வழங்கினார். மேலும் நிகழ்வின் நடவடிக்கைகளை முடித்தும் கடற்படைத் தளபதி ஒரு குழு புகைப்படத்திற்கும் கழந்து கொண்டார்.