கேரள கஞ்சா வைத்திருந்த மூன்று நபர்கள் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை கூட்டாக இனைந்து 2020 பிப்ரவரி 16 ஆம் திகதி வவுனியா கலுகுன்னம்மாடு பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 160 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டனர்.

2020 பிப்ரவரி 16 ஆம் திகதி வவுனியா கல்குன்னம்மாடு பகுதியில் கடற்படை மற்றும் மடுகந்த காவல்துறை சிறப்பு பணிக்குழு இனைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது பாதையில் சென்ற சந்தேகத்திற்கிடமான மூன்று நபர்களை பரிசோதித்து ஆய்வு செய்துள்ளனர் அப்போது அவர்களிடமிருந்து சுமார் 160 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் மூன்று சந்தேக நபர்களும், 160 கிராம் கேரள கஞ்சாவும் கைது செய்யப்பட்டது. குறித்த சந்தேக நபர்கள் வவுனியா பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் மற்றும் 160 கிராம் கேரள கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக இரட்டபெரியகுளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவ்வாரு, இலங்கை கடற்படை நாட்டிற்குள் கடத்த முயற்சித்த பல சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் கடத்தல்காரர்களை கைது செய்துள்ளது.