இலங்கை சீனா தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கேர்ணல் வன் டோன்ங் கடற்படை தலைமையகத்திற்கு வருகை

இலங்கை சீனா தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கேர்ணல் வன் டோன்ங் இன்று (பிப்ரவரி 17, 2020) கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்தார்.

அதன்படி, கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்த இலங்கை சீனா தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கேர்ணல் வன் டோன்ங் அவர்களை விஷேட மரியாதை அணிவகுப்பு வழங்கி கடற்படை தலைமையகத்திற்கு வரவேற்கப்பட்டது. அவர் பாதுகாப்பு ஆலோசகராக கடமைகளை ஏற்றுக்கொண்ட பின்னர் கடற்படை தலைமையகத்திற்கு வந்த முதல் பயணம் இதுவாகும்.

கடற்படைத் தளபதியும், இலங்கை சீனா தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகரும் பல முக்கியமான விஷயங்கள் குறித்து நல்லுறவைப் பரிமாறிக் கொண்டனர், மேலும் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு பரிசுகளையும் பரிமாறிக் கொண்டனர்.