ஐந்து அங்கீகரிக்கப்படாத சுழியோடிகள் கடற்படையினரால் கைது

2020 பெப்ரவரி 18 ஆம் திகதி புத்தளத்தின் உடப்புவவுக்கு வெளியே உள்ள கடல்களில், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக டைவிங் செய்து கொண்டிருந்த ஐந்து (05) அங்கீகரிக்கப்படாத சுழியோடிகளை கடற்படை கைது செய்தது.

அதன்படி, சட்டவிரோத சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஐந்து சுழியோடிகளை, உடப்பு கடல் பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த கடற்படை கப்பல் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் அவர்கள் இரண்டு டிங்கிகளுடன் கைது செய்யப்பட்டனர். இந்த நபர்கள் சங்கு ஓடுகளைப் பிடிப்பதற்காக டைவிங்கில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. சந்தேக நபர்கள் 40 முதல் 50 வயதுடைய புத்தளத்தில் உள்ள கோந்தாந்தீவ் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், டைவிங்கிற்குப் பயன்படுத்தப்படும் 16 ஆக்ஸிஜன் தொட்டிகள், அவர்கள் பயன்படுத்திய 02 ஓபிஎம்கள் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்களும் கடற்படை காவலில் எடுக்கப்ட்டது. மேலதிக விசாரணைக்கு அவை புத்தளம் மீன்வளத்துறை உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டன.