அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய இரு நபர்கள் (02) கடற்படையால் கைது

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய இரு நபர்கள் (02) 2020 பிப்ரவரி 20 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டனர்

நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது, மேலும் திருகோணமலை செம்பல்தெட்டி பகுதியில் கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படையினர் குழு ஒன்று மற்றொரு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அங்கு இரண்டு சந்தேக நபர்கள் அனுமதி இல்லாமல் மணல் ஏற்றும்போது கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒரு டிப்பர் வண்டி, டிரெய்லருடன் ஒரு டிராக்டர் மற்றும் 04 கியுப் மணல் கைது செய்ய்படப்டது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வரகாபொல மற்றும் தெஹிவத்த ஆகிய பகுதியில் வசிக்கும் 25 மற்றும் 37 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள், டிப்பர் வண்டி, டிரெய்லருடன் டிராக்டர் மற்றும் மணல் 04 கியுப் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முத்துர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.