கடற்படை மற்றும் காவல்துறை நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது ஹெராயின் கொண்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்

இன்று (2020 பிப்ரவரி 22,) தலைமன்னார் நகர மையத்தில் கடற்படை மற்றும் மன்னார் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு நடத்திய கூட்டு நடவடிக்கையில் ஹெராயின் கொண்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும், போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யவும் இலங்கை கடற்படை பல நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் மன்னார் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு இணைந்து, தலைமன்னார் நகர மையத்தில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது அங்கு இரண்டு சந்தர்ப்பங்களில், இரண்டு சந்தேக நபர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் செல்வதைக் கண்கானித்த கடற்படையினர் இரண்டு சந்தேகநபர்களை மேலும் பரிசோதித்தனர் அப்போது ஒரு சந்தேகநபரிடமிருந்து 03 கிராம் 100 மிலி கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதுடன் மற்ற சந்தேகநபரிடமிருந்து 03 கிராம் 75 மிலி கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த ஹெராயின் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது கண்டுபிடிக்கப்பட்டதுடன் சந்தேக நபர்கள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஹெராயின் ஆகியவையும் கைது செய்யப்பட்டன.

சந்தேக நபர்கள் 22 மற்றும் 43 வயதுடைய பேசாலை மற்றும் தலைமன்னார் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டார்கள் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஹெராயின் மேலதிக விசாரணைகளுக்காக பேசாலைபொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. எதிர்காலத்திலும் கடற்படை தொடர்ந்து இதுபோன்ற சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.