வெடி பொருட்கள் பயன்படுத்தி பிடித்த 250 கிலோ கிராம் மீன் கடற்படையால் கைது

2020 பிப்ரவரி 22 ஆம் திகதி நச்சிகுடா பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையில் வெடி பொருட்கள் பயன்படுத்தி பிடித்த மீன்களுடன் நான்கு நபர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைந்த கடற்படை வீரர்கள் நச்சிகுடா பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனையின் போது வெடி பொருட்கள் (டைனமைட்) பயன்படுத்தி பிடித்த 250 கிலோ மீன், ஒரு டிங்கி படகு மற்றும் நான்கு நபர்கள் (04) கைப்பற்றினர். சந்தேகநபர்கள் 20, 26, 27 மற்றும் 50 வயதுடைய நச்சிகுடா, பூனகரி மற்றும் வேலனி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள், மீன் பொதி, டிங்கி படகு மற்றும் வெளிப்புற எரிப்பு இயந்திரம் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிலினோச்சி மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. இவ்வாரான வெடி பொருற்கள் பயண்படுத்தி மீன்பிடிப்பதினால் இலங்கை சுற்றியுள்ள கடலில் சுற்றுச்சூழல் அமைப்பு மிகவும் அழிவுகரமானது, ஏனெனில் வெடிப்பு பெரும்பாலும் மீன்களை ஆதரிக்கும் அடிப்படை வாழ்விடங்களை அழிக்கிறதுடன் இலங்கை கடலில் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவதைத் தடுப்பதற்காக இலங்கை கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.