ஜப்பானிய கடற்படை கப்பல் தகனாமி (TAKANAMI) தாயகம் திரும்பின

2020 பிப்ரவரி 21 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த ஜப்பானிய கடற்படை கப்பல் தகனாமி (TAKANAMI) இன்று (2020 பிப்ரவரி 23) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.

அதன் படி இரு நாடுகளுக்கும் இடையே நட்பை வளர்க்கும் நோக்கத்துடன் வந்த இக் கப்பல் இலங்கையில் நங்கூரமிட்டுள்ள காலத்தில் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளதுடன், இரு நாடுகளின் அறிவையும் அனுபவத்தையும் பரிமாறிக்கொள்ள இந்த திட்டங்கள் உதவியதுடன் ஜப்பானிய கப்பலின் அதிகாரிகள் மற்றும் கடற்படையினர்கள் இந்த திட்டங்களை பாராட்டார்கள்.

மூன்று நாள் வெற்றிகரமான உத்தியோகபூர்வ விஜயத்தைத் தொடர்ந்து, இன்று (2020 பிபரவரி 23) நாட்டை விட்டு வெளியேறிய ஜப்பானிய கப்பலுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய இலங்கை கடற்படை விடைபெற்றது.