கடற்படை தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, 2020 பிப்ரவரி 22 முதல் 24 ஆம் திகதி வரை வடக்கு கடற்படை கட்டளையில் ஒரு ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அங்கு கடற்படைத் தளபதி காங்கேசந்துரை துறைமுகத்தில் புதிய இறங்குதுறையின் தற்போதைய முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். இதில் துணை தலைமை பணியாளர் மற்றும் வடக்கு கடற்படைக் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர உட்பட இத் திட்டத்தை பொறுப்பான அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தில் மேற்கொள்கின்ற சேவா வனிதா யோகர்ட் திட்டத்திற்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி அருந்ததி உதிதமாலா ஜெயனெட்தி மற்றும் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர ஆகியோரால் நாட்டப்பட்டது.

இந்நிகழ்வுக்காக இலங்கை கடற்படை கப்பல் உத்தரவின் கட்டளை அதிகாரி உட்பட மூத்த மற்றும் இளைய கடற்படையினர் கழந்துகொண்டனர்.