‘Commander’s cup 2020’ வருடாந்த கோல்ப் போட்டித்தொடரில் கடற்படை விளையாட்டு வீரர்கள் சிறந்து விளங்கினார்கள்

2020 பிப்ரவரி 22 ஆம் திகதி திருகோணமலை, சீனா துறைமுகம் விமானப்படை ஈகள்ஸ் கோல்ஃப் மைதானத்தில் நடைபெற்ற ‘Commander’s cup 2020’ வருடாந்த கோல்ப் போட்டித்தொடரில், கடற்படை விளையாட்டு வீரர்கள் பல வெற்றிகள் பெற்றுள்ளனர்.

அதன்படி, இந்த போட்டித் தொடரில் பாதுகாப்பு பிரிவில் அதிகபட்சமாக 35 மதிப்பெண்களுடன் இலங்கை கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டர் ஹர்ஷ உதவத்த சாம்பியன்ஷிப் மற்றும் லாங் ஸ்ட்ரைக் சாம்பியன்ஷிப்பை வென்றார். இதன் இரண்டாமிடம் கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டர் ருவன் ரத்னாயக்க வென்றார். 2018 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஷிப்பை வென்ற லெப்டினன்ட் கமாண்டர் ஹர்ஷா உதவத்த, இந்த ஆண்டிலும் இரண்டாவது முறையாக சாம்பியன்ஷிப்பை வென்றார்.

இப் பொட்டித் தொடரில் விருது வழங்கும் விழா மாலையில் சீனா துறைமுகம் விமானப்படை தளத்தில் உள்ள கிளப் ஹவுஸ் ஈகள்ஸ் கோல்ஃப் லிங்கில் நடைபெற்றது, இதுக்காக விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் சுமங்கல டயஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.