ரியர் அட்மிரல் ருவன் பெரேரா கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்கிறார்

ரியர் அட்மிரல் ருவன் பெரேரா இன்று (2020 பெப்ரவரி 26) கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கட்டளை அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

ரியர் அட்மிரல் ருவன் பெரேராவை கடற்படை மரபுகளுக்கமைய கிழக்கு கடற்படை கட்டளைக்கு வரவேற்கப்பட்டது. குறித்த கட்டளையின் முன்னாள் தளபதியான ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்கவினால் கிழக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ரியர் அட்மிரல் ருவன் பெரேராவுக்கு ஒப்படைத்துள்ளார். கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, ரியர் அட்மிரல் ருவன் பெரேரா வட மேற்கு கடற்படை கட்டளையின் தளபதியாக பணியாற்றினார். ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க விரைவில் கடற்படையில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.

அதன் படி, கிழக்கு கடற்படையின் தளபதியாக பணியாற்றிய ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்கவுக்கு கிழக்கு கடற்படை கட்டளையின் அதிகாரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்த பின் கடற்படை மரபுகளுக்கமை படி விடைபெற்றார்.