ஐஸ் (Methamphetamine) போதைப்பொருளுடன் ஒரு நபர் கைதுசெய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2020 பிப்ரவரி 29 ஆம் திகதி புத்தலம் பகுதியில் மேற்கொண்டுள்ள கூட்டு சோதனை நடவடிக்கையின் போது ஐஸ் (Methamphetamine) போதைப்பொருளுடன் ஒரு நபர் (01) கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் இலங்கை கடற்படை, நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருட்களைத் தடுப்பது குறித்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதேபோன்ற ஒரு நடவடிக்கை வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் புத்தலம் காவல்துறை இனைந்து புத்தலம் பகுதியில் மேற்கொண்டுள்ளது. அங்கு ஒரு சந்தேகமான வீடொன்றில் இருந்து 570 மிலி கிராம் ஐஸ் (Methamphetamine) போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் வீட்டில் இருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர் 37 வயதான அப்பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ஐஸ் (Methamphetamine) போதைப்பொருள் ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தலம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.