இலங்கை கடற்படை கப்பல்துறை தனது 35 வது ஆண்டு நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடியது

திருகோணமலை, கடற்படை கப்பல்துறை தனது 35 வது ஆண்டு நிறைவு விழாவை இன்று (2020 மார்ச் 01) நிருவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் ஹரித ஜயதேவ தலைமையில் பெருமையுடன் கொண்டாடியது.

அதன்படி, கட்டளை அதிகாரி காலையில் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப பிரிவுகளை ஆய்வு செய்து குழுவினரை உரையாற்றிய பின் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா தலைமையில் விருந்து வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள், மூத்த மற்றும் இளைய கடற்படையினர் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.