சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் (02) கடற்படையால் கைது

2020 மார்ச் 01 ஆம் திகதி இரனைதீவு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் (02) கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

அதன் பிரகாரமாக வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குறித்த நபர்கள் இவ்வாரு கைது செய்யப்பட்டன. அங்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு டிங்கி படகு, எட்டு சட்டவிரோத மீன்பிடி வலைகள், ஒரு வெளிப்புற எரிப்பு இயந்திரம் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் கடற்படையால் கைது செய்யபட்டது.மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் 26 முதல் 38 வயதுடைய பூனரின் பகுதியில் வசிப்பவர்கள் எனக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நபர்கள், டிங்கி படகு, சட்டவிரோத மீன்பிடி வலைகள், வெளிப்புற எரிப்பு இயந்திரம் மற்றும் மீன்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.