கேரள கஞ்சா வைத்திருந்த இருவரை கைது செய்ய கடற்படை உதவி

இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து இன்று (2020 மார்ச் 02) கெபிதிகொல்லேவ பகுதியில் நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதன் படி வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் கெபிதிகொல்லாவ பொலிஸ் சிறப்பு படையணி இனைந்து கெபிதிகொல்லாவ பகுதியில் இன்று (2020 மார்ச் 02) மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது சாலையில் பயணித்த சந்தேகத்திற்கிடமான இரண்டு நபர்களை சோதனை செய்யப்பட்டது. அங்கு அவர்களிடமிருந்து 500 கிராம் கேரள கஞ்சா கண்டு பிடிக்கப்பட்டதுடன் இவர்களை கடற்படையால் கைது செய்யப்பட்டது. அதன்படி, 21 வயதான சந்தேக நபர்கள் அப்பகுதியில் வசிப்பவர்கள் என்பது மேலும் உறுதிப்படுத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கேரள கஞ்சா ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக கெபிதிகொல்லாவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.