கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி 2020/1(JCET) திருகோணமலையில் தொடங்கியது

இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படை இணைந்து மேற்கொள்ளும் கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி 2020/1 (Joint Combined Exchange Training 2020/1) 2020 மார்ச் 02 ஆம் திகதி திருகோணமலை சிறப்பு படகு படைத் தலைமையகத்தில் தொடங்கியது.

இப் பயிற்சியின் தொடக்க விழாவின் பிரதம அதிதியாக 4வது துரித தாக்குதல் ரோந்து படகு படையின் கட்டளை அதிகாரி கேப்டன் தம்மிக விஜேவர்தன கழந்துகொன்டுள்ளதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படை அதிகாரிகள், வீரர்கள் மற்றும் அமெரிக்க இராணுவ சிறப்புப் படைகளின் உறுப்பினர்கள் கழந்துகொண்டனர். மேலும் 4 வது விரைவு தாக்குதல் படகுகள் குழுவின் மற்றும் சிறப்பு படகுப் படை பிரிவின் 35 வீரர்களும் கழந்துகொள்ள உள்ளனர்.

மேலும், நான்கு வார பயிற்சி காலத்தில் மனித உரிமைகள், நில தற்காப்பு சட்டம், தந்திரோபாய பாதுகாப்பு கட்டளை பாதுகாப்பு, இலக்கு படப்பிடிப்பு, சட்டவிரோத கடல் வழங்கல் கோடுகள், இராணுவ முடிவெடுப்பது, தொழில்முறை திறன் மேம்பாடு ஆகிய பாடங்கள் மற்றும் செயல்பாட்டு துறைகளில் அமெரிக்க இராணுவம் மற்றும் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது அது தூண்ட பரிமாற்றம் அறிவு பலப்படுத்தியது.