கடற்படைத் தளபதி ‘ஆசியாவில் நீர் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை’ குறித்த பட்டறையில் சிறப்புரையாற்றினார்.

இன்று (2020 மார்ச் 03) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற ‘ஆசியாவில் நீர் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை’ என்ற பட்டறையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா சிறப்புரையாற்றினார்.

காலநிலை மாற்றம் காரணமாக மோசமடைந்துவரும் பேரழிவுகளை எதிர்கொண்டு நீர் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை பகுப்பாய்வு செய்வது இந்த பட்டறையின் நோக்கமானது. இங்கு இலங்கையிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள், நீர் பாதுகாப்பு மற்றும் பேரழிவு நிர்வாகத்தில் சிறந்த நடைமுறைகள்" குறித்து கடற்படைத் தளபதி சிறப்புரையாற்றினார்.

East West நிறுவனம், இலங்கையில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனம், தெற்காசிய சிந்தனையாளர்கள் மாநாடு, பிராந்திய திட்ட எரிசக்தி பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்த ஆசிய பசிபிக் அமைப்பு ஆகியவை இந்த பயிலரங்கத்தை ஏற்பாடு செய்தன. இந் நிகழ்வுக்காக ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.