ஹெராயினுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் மன்னார் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு ஒருங்கிணைந்து 2020 மார்ச் 03 திகதி மன்னார், உப்புகுளம் பகுதியில் வைத்து ஹெராயினுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படை ஏராளமான மோசடிகளை வீழ்த்துவதற்காக அடிக்கடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மன்னார் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவுடன் வட மத்திய கடற்படை கட்டளை மேற்கொண்ட மற்றொரு நடவடிக்கை மன்னார் உப்புக்குளம் பகுதியில் நடத்தப்பட்டது. அங்கு சந்தேகமான ஒருவரை பரிசோதனையில், அவரிடமிருந்து 170 மில்லிகிராம் ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது, அதன் படி குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அப்பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் மன்னார் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.