இந்திய சவுதி அரேபிய தூதரகத்தில், இந்தியா மற்றும் இலங்கை பற்றிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தலைமையகத்திற்கு வருகை

இந்திய சவுதி அரேபிய தூதரகத்தில், இந்தியா மற்றும் இலங்கை பற்றிய பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரால் நவாஃப் டி. அலோடைபி இன்று (2020 மார்ச் 04) கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்தார்.

அதன் படி, வருகை தந்த பிரிகேடியர் ஜெனரால் நவாஃப் டி. அலோடைபி அவர்களை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் கடற்படைத் தலைமையகத்திற்கு அன்புடன் வரவேற்கப்பட்டது. இங்கு கடற்படைத் தளபதி மற்றும் பிரிகேடியர் ஜெனரால் நவாஃப் டி. அலோடைபி அவர்கள் பல முக்கியமான விஷயங்களைப் பற்றி உரையாடியதுடன் இச்சந்திப்பின் ஞாபகார்த்தமாக இவர்கள் இடையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.