வெடி பொருட்கள் பயன்படுத்தி பிடித்த 88 கிலோ கிராம் மீன்களுடன் ஒருவர் கடற்படையால் கைது

இலங்கை கடற்படை 2020 மார்ச் 04 ஆம் திகதி மன்னார், சவுத்பார் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது வெடி பொருட்கள் பயன்படுத்தி பிடித்த மீன்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைந்த கடற்படை வீரர்கள் மன்னார், சவுத்பார் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனையின் போது வெடி பொருட்கள் (டைனமைட்) பயன்படுத்தி பிடித்த 88 கிலோ கிராம் மீன்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர் 47 வயதுடைய அப் பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர், மீன் பொதி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் துனை மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.