பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் ‘ஷதினோட்டா’ தீவில் இருந்து புறப்படுகிறது

2020 மார்ச் 03 அன்று இலங்கைக்கு வந்த பங்களாதேஷ் கடற்படைக் கப்பலான “ஷதினோட்டா” 2020 மார்ச் 05 ஆம் திகதி தீவில் இருந்து புறப்பட்டது.

இலங்கை கடற்படை ஏற்பாடு செய்திருந்த பல நிகழ்ச்சிகளில் கப்பலின் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வுகள் இரு நாடுகளின் கடற்படை வீரர்களின் அறிவையும் அனுபவங்களையும் பரிமாறிக் கொள்ள வழி வகுத்தன.

தங்களது மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் நிகழ்வுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு தீவில் இருந்து புறப்பட்ட பங்களாதேஷ் கப்பல், கடற்படை மரபுகளுக்கு ஏற்ப இலங்கை கடற்படையால் வழக்கமாக விடைபெற்றது.