சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த 02 நபர்கள் கடற்படையினரால் கைது

மார்ச் 6, 2020 அன்று, யாழ்ப்பாணத்தின் கல்முனை கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த இருவரை கடற்படை கைது செய்தது.

சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுப்பதற்காக கடற்படை தீவின் நீரில் வழக்கமான ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளின் விரிவாக்கமாக, வடக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் இந்த 02 நபர்களை கல்முனை தென்கிழக்கு கடல் பகுதியில் இரவில் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த இந்த நபர்களை கைது செய்த்து. நபர்களுடன் 602 கடல் அட்டைகள், 01 டிங்கி மற்றும் டைவிங் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் ஆகியவை கடற்படையால் காவலில் எடுக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்கள் யாழ்ப்பாணம், செட்டிபுளம் மற்றும் முலாங்கவில் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.