இலங்கை கடற்படை கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 70 கடலாமை குட்டிகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டது

இலங்கை கடற்படை கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்கின்ற தென்கிழக்கு கடற்படை கட்டளையின் பானம கடலாமை பாதுகாப்பு மையம் மூலம் இன்று (2020 மார்ச் 08) 70 கடலாமை குட்டிகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டன.

தற்போதைய கடற்படைத் தளபதியும் கடல் மற்றும் சுற்றுச்சூழல் நட்பு திட்டக் குழுவின் தலைவருமான வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ், ஆபத்தான கடலாமை இனங்களைப் பாதுகாத்தல் மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் பல்லுயிரியலைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் முதன்மை நோக்கத்துடன் கடற்படை பல கடலாமை பாதுகாப்பு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் படி, தென்கிழக்கு கடற்படை கட்டளையின் பானம கடலாமை பாதுகாப்பு மையத்தில் பாதுகாக்கப்பட்ட கடலாமை முட்டைகளினால் வெளியே வந்த 70 கடலாமை குட்டிகள் கடலுக்கு விடுவிப்பு தென்கிழக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி ரியர் அட்மிரல் நெவில்லே உபயசிரிகேவின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.

கூடுதலாக, இலங்கை கடற்படை கடல் வளங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அடையாளம் கண்டுள்ளதுடன், மிகவும் திறமையான பணியாளர்கள் கொண்ட கடற்படை நாட்டின் முழு கடலோரப் பகுதியையும் உள்ளடக்கி கடல் வளங்களை பாதுகாப்பதில் பெரும் பணியை மேற்கொண்டு வருகிறது.