உள்ளூர் கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு இனைந்து இன்று (2020 மார்ச் 09) தனமல்வில பகுதியில் நடந்திய சோதனை நடவடிக்கையின் போது சுமார் 01 கிலோ மற்றும் 700 கிராம் உள்ளூர் கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்படை, போதைப்பொருள் இல்லாத ஒரு நாடாக இலங்கையை மாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் படி தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் அம்பலன்தோட்டை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து தனமல்வில பகுதியில் மற்றொரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது, இரண்டு (02) சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டிகள் சாலையோரம் காணப்பட்டன.மேலும் முச்சக்கர வண்டிகளை பரிசோதித்த கடற்படையினர் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சுமார் 01 கிலோ மற்றும் 700 கிராம் கஞ்சாவை மீட்டனர். அதன்படி, இரண்டு சந்தேக நபர்கள், முச்சக்கர வண்டி மற்றும் குறித்த கஞ்சா கைது செய்யப்பட்டது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 39 மற்றும் 55 வயதுடைய இப் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள், உள்ளூர் கஞ்சா மற்றும் முச்சக்கர வண்டி குறித்து தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.