டிக்கோவிட்ட பகுதியில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படை உதவி

2020 மார்ச் 11 ஆம் திகதி, டிக்கோவிட்ட மீன்வள துறைமுகம் அருகே ஒரு கொள்கலன் முற்றத்தில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்டுத்த 2020 மார்ச் 11 ஆம் திகதி கடற்படையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

அதன் படி, டிக்கோவிட்ட மீன்வள துறைமுகம் அருகே ஒரு கொள்கலன் முற்றத்தில் ஏற்பட்ட தீ விபத்தினை பற்றி இலங்கை கடற்படைக்கு வத்தலை பொலிஸார் தகவல் அறிவிக்கப்பட்ட பின் மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் இத்தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இத்தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படை தீயணைப்பு பிரிவின் கடற்படை விரர்கள், தீ அனைப்பு வாகனங்கள் மற்றும் தண்ணீர் பவுசர்கள் கழந்துகொண்டதாக குறிப்பிடத்தக்கது. இந்த தீயை கட்டுப்படுத்த அப்பகுதியில் வசிப்பவர்களின் உதவியுடன் கடற்படையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், நாட்டில் எந்தவொரு அவசர நிலையிலும் முன்னணியில் இருக்கும் இலங்கை கடற்படை, ஏதேனும் பேரழிவு ஏற்பட்டால் பொதுமக்களுக்கு உதவ தயாராக உள்ளது.