இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் 4 வது ஆண்டு கல்வி அமர்வுகள் வெற்றிகரமாக முடிவடைகின்றன

இலங்கை ராணுவ மருத்துவ சங்கத்தின் நான்காவது ஆண்டு கருத்தரங்கு 2020 மார்ச் 13 அன்று தெஹிவால அத்திடியவில் உள்ள ஈகிள்ஸ் லேக் சைட் நிகழ்வு மற்றும் மாநாட்டு மண்டபத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன முன்னிலையில் நடைபெற்றது.

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த கிட்டத்தட்ட 400 மருத்துவ, ராணுவ மற்றும் பல் மருத்துவர்களின் பங்களிப்புடன் 2016 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இலங்கை ராணுவ மருத்துவ சங்கம் (எஸ்.எல்.எம்.சி) தங்களது நான்காவது (04) ஆண்டு அமர்வை 2020 மார்ச் 13 அன்று ஈகிள்ஸ் லேக்ஹவுஸ் விழா மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்பட்டது. SLCOMM இன் 4 வது வருடாந்திர அமர்வு "இராணுவ சுகாதார விநியோகத்தில் சிறந்து விளங்குகிறது" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது.ஆலோசகர் மருத்துவர் டாக்டர் அனுலா விஜேசுந்தர, பாதுகாப்புப் படைத் தலைவரும், ராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திரா சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் சுமங்கலா டயஸ், மூத்த மாநில அதிகாரிகள், முத்தரப்பு படைகளைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ மூத்த அதிகாரிகள், சுகாதார மற்றும் மருத்துவ அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மூப் படைகளிலிருந்தும் பல அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வரவேற்பு உரையும், ஜனாதிபதியின் உரையும் இலங்கை ராணுவ மருத்துவ சங்கத்தின் தலைவர், கடற்படை இயக்குநர் ரியர் அட்மிரல் செனருப ஜெயவர்தனவினால் நிகழ்த்தப்பட்டது.இதன் போது ஆயுதப்படைகளுக்கு மருத்துவ சேவைகளின் முக்கியத்துவத்தையும், ஆயுதப்படைகளுக்கு சங்கம் வழங்கிய சேவைகளையும் வலியுறுத்தினார்.

இந்த அமர்வின் முக்கிய உரையை சர்வதேச இராணுவ மருத்துவக் குழுவின் தலைவர் பெல்ஜிய மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் கெர்ட் லெய்ர் நிகழ்த்தினார். பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன, போர்க்களத்தில் ராணுவ மருத்துவ சேவையின் முக்கியத்துவம் குறித்து கூட்டத்தில் உரையாற்றினார்.

இலங்கை ராணுவ மருத்துவ சங்கத்தின செயலாளர் லெப்டினன்ட் கமாண்டர் ஹிமாலி தர்மவீரவினால் நன்றி உறையாற்றப்ட்டது .