கடற்படையினரால் கேரள கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கைது

ரகாமா பகுதியில் 2020 மார்ச் 13 ஆம் திகதி நடத்தப்பட்ட தேடலின் போது சுமார் 01 கிலோ கேரளா கஞ்சா கொண்ட இரண்டு (02) நபர்களை கடற்படை கைது செய்தது.

ஒரு நாட்டை போதைப்பொருள் இல்லாததாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட கடற்படையின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ரகாம பகுதியில், போலீஸ் அதிரடிப்படையினருடன் ஒருங்கிணைந்து மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் நடத்திய தேடல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான வாகனமொன்று காணப்பட்டது. வாகனத்தை மேலும் தேடியதன் மூலம் சுமார் 01 கிலோ கேரள கஞ்சா உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, கேரள கஞ்சா மற்றும் வாகமும் இரண்டு சந்தேக நபர்களும் கடற்படை காவலில் வைக்கப்பட்டனர்.

சந்தேக நபர்கள் 27 மற்றும் 29 வயதுடைய கொழும்பில் உள்ள மோதர பகுதியில் வசிப்பவர்கள் என அடையாலம் காணப்பட்டுள்ளனர். கேரள கஞ்சா, சந்தேக நபர்கள் மற்றும் வாகனம் ராகம பொலீசாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டன.