முல்லைத்தீவு வடுவாக்கல் கடற்கரையில் கிளைமோர் குண்டொன்று கடற்படையினரால் மீட்க்கப்பட்டுள்ளது

கடற்படை 2020 மார்ச் 14 அன்று முல்லைத்தீவில் உள்ள வடுவாக்கல் கடற்கரையில் கிளைமோர் குண்டை மீட்டுள்ளது.

கடல் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கும் நோக்கில் கடற்படை தொடர்ந்து கடற்கரை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை நடத்துகிறது. அதன்படி முல்லைத்தீவில் உள்ள வடுவாக்கல் கடற்கரையில் கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் நடத்திய இத்தகைய கடற்கரை சுத்தம் திட்டத்தின் போது, கிளைமோர் குண்டொன்று மீட்கப்பட்டு அது கடற்படை காவலில் எடுக்கப்பட்டது.

மீட்கப்பட்ட கிளைமோர் குண்டு மேலதிக விசாரணைகளுக்காக கடற்படையின் பாதுகாப்பான காவலில் வைக்கப்பட்டுள்ளது