நூற்று மூன்று (103) கடல் ஆமை குஞ்சுகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டன

கடற்படை ஆமை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் பானமவில் உள்ள ஆமை பாதுகாப்பு மையம் இன்று (மார்ச் 15) நூற்று மூன்று (103) கடல் ஆமை குஞ்சுகளை கடலுக்கு வெளியிட்டது.

பானமவில் உள்ள ஆமை பாதுகாப்பு மையம் கடற்படை ஆமை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயக்கப்படுகிறது, இது கடற்படைத் தளபதி மற்றும் கடல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவின் தலைவர் வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில் இயங்குகிறது. இந்த 103 கடல் ஆமை குஞ்சுகள் பானமவில் உள்ள ஆமை பாதுகாப்பு மையத்தால் பாதுகாக்கப்பட்ட முட்டைகளிலிருந்து வெளிவந்தன, மேலும் தென்கிழக்கு கடற்படை பகுதி கட்டளைத்தலபதி அட்மிரல் நெவில் உபயசிரியின் மேற்பார்வையில் குஞ்சுகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டன.

இதற்கிடையில், கடல் உயிரினங்கள் மற்றும் வளங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள இலங்கை கடற்படை, தீவின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தனது வீரர்களை திறமையாக பயன்படுத்துகிறது.