காகதீவில் கேரள கஞ்சா தொகையொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இன்று (மார்ச் 15) மன்னார் கிரஞ்சி பகுதியில் உள்ள காகதீவில் இலங்கை கடற்படை மற்றும் கலால் அலுவலகம் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது 142 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கடல் வழியாக கொண்டு வரப்படும் போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளைத் தடுக்க இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி வடக்கு கடற்படை கட்டளை மற்றும் வட மத்திய கடற்படை கட்டளை காகதீவில் கலால் அலுவலகத்துடன் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்குரிய 8 உரைகளில் 65 பொதிகளில் இருந்து மொத்தம் 142 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது . மேலும் இந்த கேரள கஞ்சா தொகை கடல் வழியாக நாட்டிற்கு கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொடர்பான மேலதிக விசாரணைகள் சங்கானை கலால் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இந்த ஆண்டு இதுவரை கடற்படை மேற்கொண்ட நடவடிக்கையில் இரண்டு (02) டொன்களுக்கும் அதிகமான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது ..