இலங்கை கடற்படை கப்பல் தக்ஷினா 28 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது

இந்த ஆண்டு மார்ச் 09 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் தக்ஷினவின் 28 வது ஆண்டு விழா பிரமாண்டமாக் கொண்டாடப்பட்டது.ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், இலங்கை கடற்படை கப்பல் தக்ஷினாவின் குழுவினரால் அதன் கட்டளை அதிகாரி கேப்டன் வல்பொலாவின் வழிகாட்டுதலின் பேரில் பல மத நிகழ்வுகள் மற்றும் சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

அதன்படி, காலியில் உள்ள ‘சம்போதி’ குழந்தைகளின் இல்லம் சுத்தம் செய்யப்பட்டு, மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும், கட்டளை அதிகாரி மார்ச் 9 ஆம் திகதி காலையில் பிரிவுகளை ஆய்வு செய்து, குழு உறுப்பினர்களை உரையாற்றி, தங்கள் கடற்படை வாழ்க்கையை கண்ணியமாக நடத்துமாறு கேட்டுக்கொண்டார்.

பிரிவுகளை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, ‘பரகனா’ என்ற பழமையான கடற்படை பாரம்பரியம் நடைபெற்றது, இந் நிகழ்விற்க்கு தலைமைப் பகுதி துணைத் தளபதி தெற்கு கடற்படை பகுதி அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.