சட்டவிரோத வலைகளுடன் 02 நபர்கள் கடற்படையினரால் கைது

2020 மார்ச் 17 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் பொலீஸ் அதிரடிப்படையினருடன் இணைந்த சோதனையின்போது, அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளுடன் 02 நபர்களை கடற்படை கைது செய்தது.

சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சேதங்களைத் தடுக்க இலங்கை கடற்படை வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தெற்கு கடற்படை கட்டளை, பன்வெ,பொலீஸ் சிறப்பு பணிக்குழு மற்றும் ஹம்பாந்தோட்டை மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தின் கடற்படை குழுவினரால் 2020 மார்ச் 17 அன்று தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்ப்ட்டது. . ஹம்பாந்தோட்டை, சிப்பிகுளம் மற்றும் பராக் தெருவில் 190 க்கும் மேற்பட்ட விற்பனைக்கு சேமித்து நைலான் வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.அதன்படி, இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் ஹம்பாந்தோட்டையில் வசிப்பவர்கள், 33 மற்றும் 43 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட வலைகளுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஹம்பாந்தோட்டாவின் மீன்வளத் துறையிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டனர்.