திருகோணமலை ரயில் நிலையத்தில் கிருமி நீக்கம் செய்யும் திட்டத்தில் கடற்படை ஈடுபட்டது

தீவில் கொரோனா வைரஸ் (COVID - 19) பரவுவதைத் தடுக்கும் முயற்சியில், இலங்கை கடற்படை இன்று (மார்ச் 18, 2020) திருகோணமலை ரயில் நிலையத்தில் கிருமி நீக்கம் செய்யும் திட்டத்தில் ஈடுபட்டது.

நாட்டில் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு ஆதரவாக, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் கடற்படை ஏற்கனவே பல திட்டங்களைத் தொடங்கியுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பொது போக்குவரத்து கிருமி நீக்கும் இந்த திட்டம் திருகோணமலை ரயில் நிலையத்தில் கடற்படையின் வேதியியல் உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி பிரிவினால் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, திருகோணமலை ரயில் நிலைய வளாகங்களும் ரயில் பெட்டிகளும் முறையான நடைமுறைகளுக்கு ஏற்ப முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்பட்டன.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எதிர்காலத்தில் இதேபோன்ற கிருமி நீக்கும் திட்டங்களை முன்னெடுக்க கடற்படை அனைத்து வகையிலும் உதவுகிறது.