இலங்கை கடற்படை கப்பல் சிந்துரலவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் ராஜப்ரிய சேரசிங்க கடமையேற்பு

இலங்கை கடற்படையின் உயர் தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலான சிந்துரல கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் ராஜப்ரிய சேரசிங்க இன்று (2020 மார்ச் 20) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கேப்டன் சிந்தக குமாரசிங்கவினால் கொழும்பு துறைமுக வளாகத்தில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டது. கப்பலின் புதிய கட்டளை தளபதி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இன் நிகழ்வுக்காக மேற்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் பந்துல சேனாரத்ன கழந்துகொண்டுள்ளதுடன் அங்கு துனை தளபதியவர்களினால் கேப்டன் சிந்தக குமாரசிங்கவுக்கு ஒரு நினைவு பரிசும் வழங்கப்பட்டது.