கோட்டை ரயில் நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்தை சுற்றியுள்ள முக்கிய நுழைவாயில்களை கடற்படை இரண்டாவது முறையாக கிருமி நீக்கம் செய்து வருகிறது.

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக இலங்கை கடற்படையின் கிருமி நீக்கம் திட்டத்தின் இன்னும் சில திட்டங்கள் இன்று (2020 மார்ச் 20,) கோட்டை ரயில் நிலையம் மற்றும் கொழும்பு துறைமுக வளாகத்தில் தொடங்கப்பட்டது.

கடற்படை வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அவசரநிலை பதிலளிப்பு பிரிவு இன்று (மார்ச் 20, 2020) இரண்டாவது முறையாக கொழும்பு கோட்டை ரயில் நிலையம், அதன் அனைத்து வளாகங்களையும் கிருமி நீக்கம் செய்துள்ளது. மேலும் துறைமுக வளாகத்திலும் கடற்படை ஒரு கிருமி நீக்கம் திட்டத்தை தொடங்கியுள்ளது. எனவே பொது இடங்களில் வைரஸ் பரவுவதைத் தடுக்க கடற்படை பல நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.