இலங்கை கடற்படை முந்தலம பகுதியில் பல இடங்களை கிருமி நீக்கம் செய்துள்ளது.

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இலங்கை கடற்படை நடத்திய மற்றொரு கிருமி நீக்கம் திட்டம் 2020 மார்ச் 19 மற்றும் 20 திகதிகளில் முந்தலம காவல் நிலையம், நீதிமன்ற வளாகம், மாவட்ட மருத்துவமனை மற்றும் புத்தலம் சிறைச்சாலை மையமாக கொண்டு நடைபெற்றது.

புதிய கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு உதவுகையில், கடற்படை இந்த கிருமி நீக்கம் திட்டத்தை முந்தலம காவல் நிலையம், நீதிமன்ற வளாகம், மாவட்ட மருத்துவமனை மற்றும் புத்தலம் சிறையில் மார்ச் 19 மற்றும் 20 ஆகிய இரண்டு நாட்களில் மேற்கொண்டது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ், கடற்படையின் வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அவசரநிலை பதிலளிப்பு பிரிவு, (Chemical, Biological, Radiological and Nuclear) முந்தலம சுகாதார அலுவலரின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில், மேற்கூறிய இடங்களில் தொடர்ச்சியான கி கிருமி நீக்கம் திட்டங்களை நடத்தியது.

அதன்படி, அந்த வளாகங்களின் கிருமி நீக்கம் முறையான நடைமுறைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்டது மற்றும் வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் இதுபோன்ற பொது இடங்களில் கிருமி நீக்கம் திட்டங்களை கடற்படை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.