கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் றாகம வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுகள் கடற்படையின் உதவியுடன் புதுப்பிக்கப்பட்டது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் றாகம வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை பிரிவுகள் புதுப்பிக்கும் பணிகள் இலங்கை கடற்படையின் உதவியுடன் 2020 மார்ச் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் தொடங்கப்பட்டன.

கொரோனா வைரஸின் தாக்கத்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான வசதிகளை கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் றாகம வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலைகள் முலம் வழங்க குறித்த வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவுகள் புதுப்பிக்கும் பணிகள் கடற்படை உதவியுடன் 2020 மார்ச் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் தொடங்கப்பட்டன. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட சிவில் பொறியியலாளர்கள் பிரிவின் கடற்படையினர் இந்த பணிக்கு நியமிக்கப்பட்டது. எனவே, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அவற்றின் தேவை உணரப்பட்டால், இரு மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகளின் பகிர்வு செய்யப்பட்ட இடங்களை உருவாக்குவதற்கான கட்டுமானப் பணிகள் இங்கு நடந்து வருகின்றன.

அதன் படி கடற்படை சிவில் பொறியியலாளர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகின்ற இந்த புதுப்பிக்கும் நடவடிக்கைகள் விரைவில் நிறைவு செய்து நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான வசதிகளை அமைக்க கடற்படை செயல்பட்டு வருகிறது.