சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்ட முவர் மன்னார் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது

சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்ட முவர் இன்று (2020 மார்ச் 24) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, மன்னார் காவல்துறையுடன் ஒருங்கிணைந்து வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் இன்று (2020 மார்ச் 24) மன்னார் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்ட முவர் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணையின் போது இவர்கள் இந்தியர்கள் என்று தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நபர்கள் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டதுடன் அவர்கள் 2020 மார்ச் 13 அன்று தீவுக்கு வந்துள்ளதாக மேலும் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து மன்னார் காவல்துறை மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றதுடன் தற்போதுள்ள சுகாதார நிலைமைகளின் கீழ் 03 சந்தேகநபரும் மன்னார் காவல்துறையின் காவலில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவார்கள்